Saturday, February 7, 2009

பிப்ரவரி 8ம் தேதி

2007ம் ஆண்டில்
http://ezhuththu.blogspot.com/2007/02/blog-post_08.html

எழுதியது, பதிந்ததோடு தமிழ்ந்தியின் சிறுகதை படித்த கருத்துக்கள், fountainhead படித்துக் கொண்டிருக்கும் தாக்கங்கள் தெரிகின்றன. மூன்று நாட்களுக்கு முன்பு அதே புத்தகத்தைத் தேடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு இன்னொரு முறை படிக்க ஆரம்பிக்கலாம். ஜெஃப்ரி ஆர்ச்சரின் சிறுகதைகள் பற்றிய குறிப்பு, அதை ஒட்டி குடிதண்ணீர் வியாபரம் நடக்கும் அவலத்தைப் பற்றி ஒரு புலம்பல்.

ராணிப்பேட்டை வாணியம்பாடி பயணங்கள், தியானம் செய்து விட்டு தூங்குவது என்றும் அவதானங்கள்.

2008ம் ஆண்டில்

பிப்ரவரி 8 அன்று எழுதியிருக்கவில்லை. 7ம் தேதி
http://ezhuththu.blogspot.com/2008/02/blog-post_07.html

முந்தைய நாள் பெங்களூருவிலிருந்து ரயிலில் வந்து இறங்கி அலுவலகத்துக்குப் போகும் நிகழ்வுகள். சாலை போட்ட நேர்த்தி. நேற்றுதான் நடந்தது போல இருக்கிறது. ஒரு ஆண்டு ஆகி விட்டிருக்கிறது. அந்தச் சாலை இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான உறவாடல்கள், அலுவலகச் சூழலில் ஆக்க பூர்வமான போக்கை பாதுகாக்க வேண்டும் என்ற முயற்சிகள்.


No comments:

Post a Comment